Monday, May 29, 2017

940. கொள்ளையடிப்பது எப்படி?







*




The Hindu – 27.5.17 – THE SASIKALA WEB என்ற தலைப்பில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளது. எனக்கு அத வாசிச்சா ஒண்ணும் புரியலை. காசு மட்டும் காட்டுத் தனமா மக்கள் அள்ளிக் கட்டியிருக்காங்கன்னு தெரியுது. அம்மாடி… சும்மா அசத்துறாங்க. ரெண்டு பொம்பிளைகளும் இம்புட்டு சம்பாரிச்சி என்ன பண்ணாங்கன்னு யோசிச்சா …. ரொம்ப பிலசாபிக்கலா மனசு என்னென்னமோ சொல்லுது.  ரெண்டும் கொள்ளையடிச்சிருக்காங்கன்னு பெரிய கோர்ட் சொல்லி ஊத்தி மூடி விட்டது. அதில ஒண்ணு எப்படியோ செத்துப் போச்சு; இன்னொண்ணு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கு. அதுக்கு இன்னமும் கனவுகள் முடியலைன்னு நினைக்கிறேன். அடுத்து வந்து இன்னும் அள்ளி முடிக்கணும்னு இருக்கும் போல் தான் தெரிகிறது. அம்மாடி ………. என்ன ஆசை காசு மேலே!

இந்து தினசரி சொல்றதக் கேட்டா ஆட்சி நடத்துனதே இந்த மாதிரி காசு அள்றதுக்குன்னு தான் தெரியுது. எத்தனை எத்தனை டெக்னிக். எப்படி எப்படியெல்லாம் ஏமாத்து. முகவரி கொடுத்திருக்காங்க … அங்க போனா ஆளும் கிடையாது… அட்ரஸும் கிடையாது. ஊர்ல இருக்கிற அரசின் துறைகளை எப்படியெல்லாம் ஏமாத்தலாமோ அப்படியெல்லாம் ஏமாத்தியிருக்காங்க. சூப்பர் லேடிஸ். மெடல் தட்டிக் கொடுக்கணும். ஆனா சசிகலாவுக்குத்தான் பெரிய மெடல் தட்டிப் போடணும். (இனிமேல் பெரிய சூப்பர்னா (பெ.சூ) அது சசிகாலா; சின்ன சூப்பருன்னு (சி.சூ)  சொன்னா செத்துப் போன குற்றவாளின்னு வச்சுக்குவோம். சுறுக்கமா சொல்லலாம்ல.)

ஒரே ஒரு கேஸ் நல்லா எனக்குப் புரிஞ்சது. ஜாஸ் தியேட்டர். பீனிக்ஸ் மாலில் உள்ள இந்த தியேட்டர்களை கங்கை அமரன் கையை முறுக்கி அவர் வீட்டைப் பிடுங்கியது போல் … Jass bought Luxe from Sathyam cinemas in 2015, AMID RUMOURS OF A FORCED SALE BY THE OWNER. அதாவது கையை முறுக்கி வாங்கியதை ஆங்கிலத்தில் அப்படி இந்துவில் சொல்லியுள்ளது. இதற்கு the ubiquitous (எங்கும் எப்போதும் இருக்கும் …. நல்ல வார்த்தை பயன்படுத்தி விட்டார்கள்!!) two sons-in-law are directors of Jazz, while Ilavarasi’s 20 year old son Vivek Jeyaraman is the managing director.

அடுத்து என்ன நடந்தது? 

டிசம்பர் 21.2011ல் போயஸ் கார்டனிலிருந்து சின்ன சூப்பரு (சி.சூ) பெரிய சூப்பரை(பெ.சூ) வெளிய அனுப்பிச்சிருது. (ச்ச்சும்மா ஒரு சோஷோ!!) அப்புறம் 100 நாள் கழிச்சி பெ.சூ. லெட்டர் கொடுத்துட்டு உள்ள வருது. பெ.சூ. வெளியே போயிருந்த போது ஜாஸ் தியேட்டர்களுக்கு பொன்குன்றன்,சோ இருவரும் டைரடக்கர்களாக இருக்கிறார்கள். பெ.சூ. உள்ள வந்ததும் பெ.சூவின் ஆட்கள் – சிவகுமார் & கார்த்திகேயன் கலிய பெருமாள் இருவரும் டைரடக்கர்களாக ஆகி விடுகிறார்கள். என்னே பெ.சூ.வின் மந்திர லாகவம்! இது நடப்பது 2012ல். 

ஆனால் 2015க்குள் என்ன நடந்து விடுகிறது தெரியுமா? 4100 ஷேர் ஜாஸ் தியேட்டருக்கு வைத்திருந்த பெ.சூ. 42 லட்சம் ஷேர் வாங்கிருது. தியேட்டரும் பெ.சூவின் கைக்கு வந்து விடுகிறது. 


இதுல தண்ணிக் கம்பெனி நடத்திக்கிட்டு அதுனாலேயே காவல்துறையை விட்டு நம்ம பொம்பிளைகளை ரோட்ல அடிச்சி துறத்துராங்க. கடை நடந்தா தானே விற்பனை… காசு … கொள்ளை எல்லாம் அடிக்கலாம். நாமளும் அவங்கள அடிச்சி அனுப்பாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டே இருக்கோம்.


எனக்குப் புரிந்த கொஞ்சூண்டு விஷயத்திலேயே இத்தனை குழப்படி பண்ணி தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார்கள். எனக்கு ஒரு சந்தேகம். எனக்கும் நல்ல வயசும் ஆகிடிச்சி. படிச்சதும் அந்தக் காலத்தில பள்ளிப் படிப்பு முடிச்சி அஞ்சாறு வருஷம் படிச்சிருக்கேன். பெரிய படிப்பு தானே! ஆனே எனக்கே இந்தக் காசுகளை வச்சி இவங்க பண்ற ஜூஜா வேலையில் பாதிதான் புரிது. ஆனால் பள்ளிக்கு மழைக்கு மட்டும் ஒதுங்கின பெ.சூ.வுக்கு எப்படி இம்புட்டு விஷயம் தெரியுது. என்னமெல்லாம் பண்ணுது. இது எப்படி? 

எல்லோரும் சொல்றாங்க. காசு மட்டும் வர்ரதுக்கு வழி பண்ணிட்டா இந்த ஆடிட்டர்கள் எல்லாரும் அதுக்கு மேல என்னென்ன பண்ணணும்னு சொல்லிக் கொடுத்திருவாங்க அப்டின்னு சொல்றாங்க. உண்மைங்களா அது?கோடிக்கணக்கில வர்ர பணத்தை எப்படி எப்படி முதலீடு ஆக்கணும்; எதை மறைக்கணும்; எதை காமிக்கணும்னு அந்த ஆடிட்டர்கள் சொல்லித் தந்திருவாங்களாமே. அப்படியா?

அப்படியே இருந்தாலும் ஒரு சந்தேகம். நாலு காசு கொடுத்திட்டா இந்த ஆடிட்டர்கள் கள்ள வழி எல்லாம் சொல்லித் தந்திருவாங்கன்னா … அவங்க படிக்கிறதே இந்த மாதிரி அட்டூழியத்தை அடுத்தவங்களுக்கு சொல்லித் தர்ரதுக்குத்தானா? என்ன படிப்பு அதுங்க?  ஆடிட்டர் படிப்பு மட்டுமல்ல … வேறு சில படிப்புகளும் இருக்கு. அதிலேயும் இப்படி குத்தம் பண்றவங்களைத் தப்பிக்க வைக்க காசு வாங்கிட்டு வேலை செய்றாங்க. அதுவும் ஒரு பெரிய படிப்பு. 

நல்லத தடுக்கிறதுக்கே படிப்பாங்க போலும். நல்லா இருங்க’ய்யா!

என்னமோ போங்க … நம்ம படிப்பும் நம்ம வாழ்க்கை முறைகளும்.

கடைசியா பெ.சூ. பத்தியும் சி.சூ. பத்தியும் ஒண்ணு ரெண்டு சொல்லணும். கடைசி பத்து வருஷமா சி.சூ. நான் கொள்ளை அடிச்சிக்கிறேன்; நீயும் அடிச்சிக்கோ; அதில ஒழுங்கா வர்ர ஷேரை கொடுத்திருன்னு சொல்லியே கால்ல விழுகிற ஆளுககிட்ட சொல்லிக் கொடுத்திருக்கும் போலும். எல்லாரும் அத அப்படியே பிடிச்சிக்கிட்டு எங்கேயோ எல்லோரும் மேல .. மேல … அதுக்கும் மேல போய்ட்டாங்க. நல்ல மனுசி. 

தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல்வியாதிகள் அப்டின்னா யாருன்னு சொல்லிக் கொடுத்தாச்சு. நாமளும் ஊர்ப் பயல்கள் கொள்ளை கொள்ளையா அடிச்சாலும் “சரி .. விடுங்க … அரசியல்வியாதிகள்னா அப்படித்தான்” என்று நமக்கு நாமே பட்டை நாமம் போடப் பழகிக்கிட்டோம். நல்ல மக்கள்.

பெ.சூ. இம்புட்டு கொள்ளை அடிச்சாலும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம தலையை நிமித்திக்கிட்டு ஒரு பெரிய ஸ்டண்ட் எல்லாம் போட்டுச்சு; இன்னும் போட்டுக்கிட்டு இருக்கு. அந்த ஆள் தினகரனும் அப்படித்தான். அவங்க மனசில எப்படி கூச்சம் இல்லாம போய்டுதுன்னு தெரியலை. தொப்பியையும் வச்சிக்கிட்டு நம்மட்ட ஓட்டு கேக்க அதுகளுக்கெல்லாம் எப்படித்தான் மனசு வருதோன்னு தெரியலை. சூடு, சொரணை எல்லாம் நம்மள மாதிரி இ.வானாக்களுக்கு மட்டும் தானா?

அட… அவங்க தான் ஓட்டு கேட்க வந்தா நாமும் ஓட்டு போட்டுர்ரமே… நம்மள மாதிரி உணர்ச்சியில்லா முட்டாமக்களுக்கு ஏத்த மாதிரிதானே வர்ரவங்களும் வருவாங்க. என்னமோ போங்க! 

கடைசி 10 வருஷத்தில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணின தப்புக்கு இன்னும் எத்தனை வருஷத்துக்குக் கவலைப் படவோ தெரியவில்லை.








*




5 comments:

ப.கந்தசாமி said...

சும்மா பொலம்பாதே பெரிசு, முடிஞ்சா நீயும் நாலு காசு சம்பாதிக்கிற வழியப் பாரு.

(ஏக வசனத்திற்கு மன்னிக்கவும். அப்பத்தான் ஃப்ளோ நல்லா வருது)

தருமி said...

ப.கந்தசாமி அய்யா,
அப்போ நீங்க நாலு காசு சம்பாதிச்சி முடிச்சாச்சா. ரொம்ப ப்ராக்டிலான ஆளு சார் நீங்க.

G.M Balasubramaniam said...

நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுதே . யார் ஆண்டால் என்ன . நம்மைப் பிடுங்காமல் இருந்தால் சரி மலையாளக் கவி ஒருவர் சொன்னாராம் “தீபஸ்தம்பம் மஹாஸ்சரியம் எனிக்கும் கிட்டணும் பணம்” என்று அதுபோல்தானோ அடிவருடிகளும்

ப.கந்தசாமி said...

அதான் மாசா மாசம் வந்துடுதே, தருமி சார்.

தருமி said...

//மாசா மாசம் வந்துடுதே/ ....ஓ!

Post a Comment